Monday 20 July 2015

Destination 2 - மனிதன் என்ற அதிசயம்...

          இந்த  உலகத்திலேயே  சக்தியுள்ள  உயிர்  யாருங்க ? கடவுளா ? கடவுளுக்கு உயிர் இருக்கா இல்ல வெறும் கல்லுதான்னான்னு எனக்குத் தெரியாது..?  ஆனா ஒண்ணு  மட்டும் சொல்ல முடியும்..ஒரு மனுசனுக்குள்ள இருக்குற சக்தி யாருக்குமே கிடையாது.....நம்மால செய்ய முடியாததுன்னு  இந்த உலகத்துல எதுவுமே இல்ல...நம்ம நினைக்கிறது இல்ல...                    "EVERYTHING IS MENTAL"....அவ்வளவு தான்...இந்த உலகத்தை உலகமா பார்க்க கத்துகொடுத்ததே மனுசன் தான்...இந்த உலகத்துல பஞ்ச பூதங்களையும் உணர்ந்தது மனுசன் தான்.....நிலத்தை நிலமா மட்டும் பார்க்காம அதை "பொறுமையின் பூமாதேவியா" பார்த்தது மனுசன்  தான் ; "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல..." என்று சொன்ன திருவள்ளுவர் தாத்தா மனுசன் தான்..ச்சே..அவர் கூட ஒரு நாள் முழுசும் பேசனும்னு எனக்கு ரொம்ப ஆசை..நிறைய கேள்விகள் இருக்கு....சரி..டாபிக் வருவோம்....."நீர்" -  கடலா மட்டும் பாக்காம , மனசோட ஆழமா  ஒப்பிட்டு சொன்னது  மனுசன் தான் ; "காற்று" -  உயிர்வாழ அவசியமானது என்ற உண்மையை மட்டுமில்லாம , காற்று கற்றுகொடுக்கும் சங்கீதத்தையும் கண்டுபுடிச்சது மனுசன் தான் ; ஆகாயம் - அளவிடமுடியாத எல்லையைக் கொண்டது என்பதை மட்டுமில்லாமல் அன்பின் அளவுகோளாக ஆகாயத்தின் அளவற்றத் தன்மையைச் சுட்டிகாட்டியது மனுசன் தான் ;  "நெருப்பு"  - வெப்பத்தின் பிறப்பிடம் என்ற உண்மைய கண்டுபுடிச்சதோட மட்டுமில்லாம , அதை எப்படி உருவாக்கணும் என்ற அதிசயத்த  சொன்னது மனுசன் தான்.....மனுசன் செய்யாதது என்ன இருக்கு..? அறிவியலை ஆராய்ச்சி பண்ணது மனுசன் தான். ஆண்மீகத்தை அறிமுகப்படுத்தியதும் மனுசன் தான்....கல்ல சிலையாக்குனதும் மனுசன் தான்......சிலைகளுக்கு உயிர் கொடுத்ததும் மனுசன் தான்....மனுசன மனுசாக்குற கல்வியைக் கொடுத்ததும் மனுசன் தான்...மனச தெய்வமாக்குற காதல் கொடுத்ததும் மனுசன் தான்.....மனுசனும் மனுசனும் பேசிக்க மொழி கொடுத்ததும் மனுசன் தான்...எந்த மொழியாலயும் வர்ணிக்க முடியாத சில உண்ர்வுகள உள்ளக்குரல்களையும் உலகத்துக்கு எடுத்துச் சொன்னது  மனுசன் தான்....மனுசனுக்கு மேல கடவுள்னு சொன்னதும் மனுசன் தான்......மனுசன மனுசனா மதிக்கிற மனுசன் மட்டும் தான் கடவுள்னு சொன்னதும் மனுசன் தான்....பக்திய போதிச்சதும் மனுசன் தான்...பகுத்தறிவ பரைசாற்றியதும் மனுசன் தான்.....இன்னும் சொல்லிட்டெ போகலாம்....அந்த மனுசன பொறந்த நம்மளுக்கு " மனுசன்" , அப்படிங்க்ற கர்வம் வேணும்......இந்த பூமியில இருக்குற எல்லாருமே நம்ம சொந்தம் தான்.....மனுசன் கண்டிப்பா இந்த பூமியில பிறந்த ஒரு அதிசயம் தான்...அதனால் மனுசன மனுசன் தான் மதிக்கணும்; மனுசன மனுசன் தான் காப்பாத்தணும்.....165 கோடி செலவு பண்ணி  "புஷ்கரம்" பண்டிகையைக் கொண்டாடுறதுக்கு பதிலா  10க்கும் மேற்பட்ட கிராமத்த தத்தெடுத்திருந்தா அங்க எத்தனையோ  "புன்னகைப் பூக்கள்" பூத்திருக்கும்...எத்தனையோ பண்டிகைகளும் , கொண்டாட்டங்களும் நடந்திருக்கும்..எத்த்னையோ மனுசங்க உருவாகியிருப்பாங்க.......நம்ம பக்கத்துல , நம்ம கண்ணுக்கு முன்னாடி யாராவுது பசியா இருக்காங்கன்னா அதுக்கு  நம்மளும் காரணம் தான்..நம்ம நினைச்சா அந்த பசிய போக்கலாம்...நம்ம நினைச்சா எந்தப் புரட்சியையும் கொண்டுவரலாம்...."EVERYTHING IS MENTAL" - என்னோட பயிற்சி காலத்துல என் மனசுல பதிக்கப்பட்ட முதல் வாழ்க்கை மந்திரம்....மனுசன் நினைச்சா அதிசயம் லாம் அசால்டா நடக்கும்...ஆனா, நினைக்கதான் மாட்டோம்...ஆனா ஒண்ணுங்க, நினைக்கலைன்னா , மனுசனே இல்ல....  நம்மனால "ஆக்கவும் முடியும் , காக்கவும் முடியும் , அழிக்கவும் முடியும் "...ஆஹா..அப்படின்னா   "நாம் கடவுள்" உண்மையா...? உண்மைதான்.......மனுசனா இருந்து அதிசயம் செய்ய நினைங்க.....

1 comment: