Sunday 19 July 2015

Destination 1 - மறதி ஒரு வரம்...

           ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவத்த கொடுத்துட்டுதான் இருக்குது.. அது நல்ல அனுபவமாவும் இருக்கலாம்.. ஒரு கசப்பான அனுபவமாவும் இருக்கலாம்...அந்த அனுபவத்த  நம்ம சுத்தியிருக்குற யாரு வேணும்னாலும் கொடுத்திருக்கலாம்...அது அம்மா - அப்பா வா இருக்கலாம் ; அண்ணன்- தம்பி-அக்கா-தங்கச்சி என்ற உடன்பிறப்புக்களாவும் இருக்கலாம்;  மனைவியா இருக்கலாம்; பெற்ற பிள்ளைகளாக இருக்கலாம்;  நாம நேசிக்கும் நெஞ்சமாவும் இருக்கலாம்; ஆருயிர் நண்பனாவும் இருக்கலாம் ; ஆசிரியரா இருக்கலாம்; அலுவலகத்தின் உயர் அதிகாரியாக இருக்கலாம்;  இல்ல நமக்கு கீழ வேலை பார்க்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம்... நல்ல அனுபவத்த கொடுத்த எந்த மனசையும் மனசார பாராட்டாம விட்றாதீங்க...அதுவும் , எல்லாத்துக்கும் தெரியிர மாதிரி பாராட்டுங்க..."பாராட்டு" மனசுக்கு கிடைக்குற அங்கீகாரம்னு சொல்வாங்க..நல்லவுங்க நல்லவுங்களாவே இருக்கவும் , இன்னும்  நிறைய நல்ல மனசுள்ள மனிதர்கள்  உருவாகவும் , நீங்க பாராட்டுற அந்த அஞ்சு நிமிசம் கண்டிப்பா உதவும்..அதே உங்கள  புண்படுத்தியோ , நெஞ்சை கசக்கி புழியிற மாதிரி வார்த்தைகள பேசியோ , உங்களோட தன்னம்பிக்கையை அடிமட்டத்துக்கு கொண்டுபோய் , உங்களையே நீங்க வெறுக்குற மாதிரி நடந்துக்குற யாராக இருந்தாலும் , நான் சொல்ற ரெண்டு விசயத்த கடைபிடிச்சு பாருங்க...ஒன்று , அந்த மாதிரி நிமிடங்கள் வரப்போவுதுன்னு மனசு சொல்லும் போது , டக்குன்னு , " மௌனம் விரதம் " எடுத்துறங்க..உங்க உணர்ச்சி கொந்தளிக்கும் போதும் மௌனமாவே இருங்க.. மௌனம் சத்தத்தை விட மிக வலிமையானது...சக்தியுள்ளது...அந்த நிமிசங்கள போக விடுங்க.....அப்புறம் , தனியாக போய் , யோசித்து பாருங்க , யாருக்குத் தெரியும் , நீங்க பண்ணதே தப்புனு தோணலாம்..இல்ல நீங்க சரிதான்னும் தோணலாம்...தப்புனு பட்டுச்சுன்னா, உடனே போய் , மன்னிப்பு கேளுங்க.."மன்னிப்பு கேக்குறவந்தான் மனுசன்"...ஏனா ஆடு மாடுக்கெள்ளாம் மன்னிப்பு கேட்க தெரியாது.. அதே உங்க மேல தப்பு இல்லனு பட்டுச்சுன்னா , யாரு சொன்னாங்களோ , அவுங்கட்ட போய் அன்பா சொல்லிடுங்க , " நான் என் மனசாட்சிக்கு விரோதமா எதுவுமே செய்யல...நீங்க பேசுனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..மனசு வலிக்குது..."  இத மட்டும் சொல்லிட்டு , வந்திடுங்க...அப்படியே மறந்துடுங்க...மன்னிச்சிடுங்க; ஸோ, நீங்க   இரண்டாவதா நீங்க கடைபிடிக்க வேண்டியது , "  நேற்றய இரவு   நேற்றே போச்சு...இன்றைய விடியல் நம்பிக்கையாச்சு " ........0.0001% கூட   என்ன நடந்ததோ அத நெனப்புல வச்சுக்கக் கூடாது...வேரோட அந்த நிமிடங்கள கிள்ளி வெளிய தூக்கி குப்பதொட்டியில போட்டுடுங்க..ஆமா..அது குப்பைதான்...குப்பைகளை சேத்தா நம்ம மனசு  அழுக்காயிடும்...நாற்றமடிக்கும்...    நான் எப்பயோ ஆரம்பிச்சுட்டேன்.... அந்த ரெண்டு விசயத்தையும் கடைபிடிக்க ....எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா வாழ்க்கை...யாரையுமே என்னால வெறுக்க முடியல.. ஒவ்வொரு நாளும் புதுசா ஆரம்பிக்கும் ஃபீலே தனி......அப்பதான் புரிஞ்சுகிட்டேன்...மறதி ஒரு பெரிய வரம்னு...

No comments:

Post a Comment