Friday 17 July 2015

எழுத்து வண்டி தயார்...

                                         எழுத்துக்களுக்கு கண்டிப்பாக இன்னும் மகாசக்தி இருக்குன்னு நான் முழுசா நம்பறேன்...மனச படம்பிடிச்சு கண்ணாடி மாதிரி காட்டும் எழுத்துக்கள் ஒரு தனி மனிதனிடம் மட்டுமல்ல ஒரு சமுதாயத்திலேயே  ஒரு பெரிய புரட்சிய கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமில்ல... அதனாலதான்  நான் என் மனச எழுத்துக்கள் வசமாக்கி , எழுத்த என் வசமாக்கி , என் மனச உங்க வசமாக்க,  இந்த எழுத்து வண்டிய எடுத்துகிட்டு  புறப்பட்டிருக்கேன்......இந்த எழுத்து வண்டி எல்லா ஸ்டாப்லையும் நிக்கும்...எவ்வளவு  பேர் வந்தாலும் ஏத்திகிட்டு போக இந்த வண்டியில "தம்" இருக்கு......வண்டியோட கடைசி   நிறுத்தம் தெளிவா இருக்கிறதனால , போகும் பாதை ரொம்ப சுலபமா  கெடைச்சிடும்னு எனக்கு ,  நான் படிச்ச பள்ளியில சொல்ல மட்டும் செய்யாம , செஞ்சும் காமிச்சிருக்காங்க..... என் மனச தொட்ட ஒவ்வொரு" நிறுத்தங்கள் " லையும்  இந்த எழுத்து வண்டிய நிப்பாட்டுவேன்....அந்த நிறுத்தம் ஒவ்வொரு நாளும் வரலாம் , ரெண்டு   நாளைக்கு ஒரு முறையும் வரலாம் , ஒரே நாள்ல ரெண்டு முறையும் வரலாம்...யாரு வேணும்னாலும் எந்த நிறுத்தத்துலையும் ஏறலாம் ; எங்க வேணாலும் எறங்கலாம்.....வண்டியில போகும்போது ஒவ்வொரு பயணியும் முழு சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம்.....இந்த வண்டி தூய "தமிழ்" லையும் ஓடும் , பயணிகளோட சௌகரியத்துக்காக நம்ம " நட்பு தமிழ்" லையும் ஓடும்...ஆங்கிலத்திலையும் ஓடும்....தமிழ் கலந்த ஆங்கிலத்திலையும் ஓடும்...ஆனா..ஓடும்..ஓடும்..ஓடிகிட்டே இருக்கும்...யாருக்கு தெரியும் , ஒரு வேல இந்த வண்டியில ஒரு நாள் இந்த மனித சமுதாயமே வந்து உட்கார்ந்துட்டாங்கன்னா..? 

ஆமங்க,

" சின்னதா யோசிக்கிறது தெய்வக் குத்தம்னு "  எங்க  அம்மா அப்பா  சொல்லிருக்காங்க....நீங்க வேணாலும் கேட்டு பாருங்க....உங்க அம்மா அப்பாவும் சொல்வாங்க...

"கனவு காண்பது நம் உரிமை..அதைப் மிக மிக மிகப் பெரிதாகக் காண்பது நாம் மனித இனத்திற்கே செய்யும் கடமை..."


சரி..ரைட்..ரைட்..போலாம்..போலாம்.....

No comments:

Post a Comment