Friday 24 July 2015

Destination 3 - என் நண்பனுக்கு கல்யாணம்..


      மணி 11:45…அய்யயோ…  ட்ரைன் வர நேரமாச்சே… எல்லா வேலையையும் விட்டுட்டு டக்குன்னு கெளம்பிட்டேன்… பின்ன, சிவா, கல்யாணமாகி புது மாப்பிள்ளையா  வரான்ல…..எல்லா வேலையையும் விட இதாங்க முக்கியம்….. நட்ப விட என்னாங்க பெரிய வேலை...? ஆமாங்க..சிவா, என்னோட நீ…………..ண்ட கால நண்பன்.. ஆறாவதுலிருந்து  
ஒண்ணா படிச்சிருக்கோம்..12-வது முடிச்சிட்டு ஒண்ணா ராணுவப் பயிற்சியில மூணு வருஷம் இருந்தோம்….. பயிற்சி முடிஞ்சபிறகு ஒரே மேற்படிப்புக்கு ஆப்ட் பண்ணோம்….எங்க லக் பாருங்க, 67 பேரு இருந்த கிளாஸ்ல 5 பேரு செலெக்ட் பண்ணாங்க…..அதுல பாத்தா, எங்க ரெண்டு

பேரோட பேரும் இருந்துச்சு..எல்லாத்துக்கும் ஒரே ஆச்சரியம்… ஆச்ச்ரியத்தோட பொறாமை....இயற்கையே சில நட்பை ஆசிர்வதிக்கும்…ஆராதனை பண்ணும்…..அது மாதிரிதான் எங்க நட்பும்…….கதை இங்க முடியலங்க...… அந்த மூணு வருஷம் மேற்படிப்பு முடிச்ச கையோட வந்த  அடுத்த வேலையும் ஒரே இடத்துல……சத்தியமா , நம்பவே முடியலைங்க…இப்பதான் சின்ன பையனா பழகிட்டிருந்தோம்…..எத்தனை சண்டைகள் , எத்தனை சமாதானங்கள் , எத்தனை சாதனைகள் , எத்தனை கொண்டாட்டங்கள்…..அதுக்குள்ள கல்யாணமாகி மனைவியோட வந்து நிக்கப்போறான். காலம் பயங்கர ஸ்பீடா போயிருச்சு..…கண்ண சிமிட்றதுக்குள்ள  வயசு எங்கயோ போய் நிக்குது…….எதை எதையோ மனுஷன் கண்டுபுடிக்கிறான்..இந்த காலத்தை நிறுத்த ஒரு வழி கண்டுபுடிக்க முடியாதா..?ஒரு பக்கத்துல அவனோட வாழ்க்கை முன்னேற்றத்தைப் பார்த்தும் , அவனுக்கு நடக்குற நல்ல விஷயங்களைப் பார்த்து  சந்தோஷமா இருந்தாலும் , இன்னோரு பக்கத்துல மனசு வலிக்குதுங்க…..என்னோட நண்பனா இருந்தவன் , இப்போ "கணவன்" ங்கற ஒரு புது பொறுப்போட இறங்குவான்...அந்த வசந்த காலம் ”  இனிமேலும் வருமான்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு….. அவனோட வெற்றிய கொண்டாட நண்பர்கள் மட்டும் திட்டம் போடும் சுதந்திரம் பறிபோனமாதிரி ஒரு உணர்வு….திடீர்னு ப்ளான் பண்ணி , போரடிக்குதுன்னு நைட் ரெண்டு மணிக்கு கார்ல ட்ரைவ் போக முடியாதே.....இனிமேல் நெனைச்ச நேரத்துல எப்ப வேணாலும், “ டே மச்சான்.. மனசு கஷ்டமா இருக்கு..வெளிய போலாமா..?” ன்னு கூப்பிட முடியாது…..ஞாயித்துக்கிழமைத "பேச்சலர் திட்டத்துல" அவன் பேர இனிமேல் சேக்க முடியாது…சரி விடுங்க…இப்படியே லிஸ்ட் பெருசா போகும்…இந்த மனசிருக்கே மனசு , கஷ்டப்பட முத ஆளா நிக்கும்……. நம்ம தான் மனசுக்கு சந்தோஷமா இருக்க கத்துகொடுக்கணும்...இந்த விஷயத்துலயே பாருங்க...உண்மையா சொல்லப்போனா , அவனோட வெற்றிய இன்னும் சிறப்பா கொண்டாட ஒருத்தவங்க வந்திருக்காங்க…..சந்தோஷத்த பகிர்ந்துகிட்டா சந்தோஷம் குட்டி போட்டு குட்டி போட்டு இன்னும் நிறைய சந்தோஷந்தான் கொடுக்கும்……சந்தோஷம் அதிகமானா ஆனந்தம்தானே…என் மனசுக்கு சின்னக் குழந்தைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொன்னேன்.....”ரயில்வே ஸ்டேஷன்” வந்திருச்சுன்னு கண்டக்டர் சொன்னதும்தான் நினைவுக்கே வந்தேன்…. நான் ரெடி ஆகிட்டென்..என் நண்பன “அவன் குடும்பத்தோட” வரவேற்க..ஒத்தையா போனவன் ஜோடியா வராண்டா...……..அவனுக்கு எல்லா உதவி செய்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்……நண்பேன்டா……!!!வாடா..வா....

No comments:

Post a Comment