Thursday 29 October 2015

நிறுத்தம் 5 - எத்தனை மனிதர்கள்..அத்தனை முகங்கள்..

                            
                                         சமுதாயம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு....ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் தேவைகளைப் பூர்த்திசெய்ய எல்லோரும் சேர்ந்து உழைத்து வாழ்வது தானே சமுதாயம்..ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சில தனித்தன்மைகள் உண்டு..அவர்கள் பேசும் மொழி, பழகும் முறை , வாழும் கோட்பாடுகள்  என அடுக்கிக்கொண்டேப் போகலாம்...பல தலைமுறைகளின் பதிவாகத் தொடர்ந்து வரும் சில வாழ்க்கை முறைகள் அந்த குறிப்பட்ட சமுதாயத்தினரை அடையாளமாக காட்டப்படுகிறது....தமிழனா ..இவன் இப்படித்தான்...தெலுங்கனா இவன் இப்படித்தான்....பீகார்காரனா இவன் இப்படித்தான்...என நம் மனதில் ஏற்கனவே இருந்து வரும் எண்ணங்களால் நாம் எடுக்கும் முடிவு எந்த விஷயத்திலும்  நிலைகுறைந்து போக வாய்ப்புகள் உண்டு..ஏனென்றால் , ஒவ்வொரு மனிதனும் அதிசயம்தான்..அவன் எப்பொழுது மாறுவான் , என்ன நினைப்பான் என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும்.....அதனால் , நாம் வேலை செய்யும் இடமாக இருக்கட்டும் , நம் உறவுகளாக இருக்கட்டும் , நட்பாக இருக்கட்டும் , அனைத்திலும் "எத்தனை மனிதர்கள்..அத்தனை முகங்கள்..." என்ற பரந்த மனத்தோடு பயணம் செய்தால் , நம் முடிவுகள் நியாயமாகவும் சரியாகவும்  இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்..ஒவ்வொரு சமுதாயமும் இப்படித்தான் என்பதைத் தாண்டி ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் என்ற கட்டவிழ்ந்த மனத்தோடு ஒவ்வொரு சவாலையும் சந்திக்க வேண்டும்...ஒருவனைப்பற்றியோ , ஒரு நபர் சம்பந்தப்பட்ட விஷயத்தைப்ப்ற்றி முடிவெடுக்கும்பொழுது  , அவனைப்பற்றி , அவனுடைய மன சூழ்நிலையைப்பற்றி, அவன் குடும்ப சூழ்நிலையைப்பற்றி , அவனுடைய ஏக்கங்களைப்பற்றி , ஏமாற்றங்களைப்பற்றி முழுதாக புரிந்து கொண்டபிறகே , நாம் நம் முடிவை எடுக்க வேண்டும்...அப்பொழுது ஆராயும் பொழுது தான் மனிதனின் மனம் எவ்வளவு அதிசயமானது என்பதை உணர்வோம்..







No comments:

Post a Comment